முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்க்கைத் தத்துவம்

வாழ்க்கை என்பது நமக்கும் சமுதாயத்திற்கும் இடையறாது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு போராட்டம் .நீர்க்குமிழி போன்று தோன்றி மறையும் இவ்வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளும் நமக்கு பல உண்மைகளை உணர்த்திச் செல்கின்றது. இரவு பகல் என்னும் சதுரங்கப் பலகையிலே விதி மனிதர்களைக் காய்களாக்கிக் கொண்டு விளையாடும் சூதாட்டம் தான் வாழ்க்கை என்பது பாரசீக கவிஞர் உமர்கயாமின் கருத்து. வாழ்வு நிலையற்றது .நேற்று இருந்தவன் இன்று இல்லை .இன்று இருந்தவன் நாளை இல்லை என்று கூறத்தக்க உலகில் நாம் வாழ்ந்து  கொண்டிருக்கின்றோம்.இருப்பினும் இவ்வுலகம் நிலையானது என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். நிலையாமை உலகத்தின் இயற்கை என்பதை உணர வேண்டும். பல நூல்களைக் கற்ற சான்றோர்கள் கூடியுள்ள அவையில் பலர் கூடி வாதிட்டாலும் தொண்டை கிழிய முழங்கினாலும் இவ்வுலகம் நிலையற்றது என்பதுதான் உண்மை. வாழ்வு மட்டுமல்ல நாம் நினைக்கக்கூடிய எண்ணங்களும் நிலைத்து நிற்பதில்லை. நிலையற்ற வாழ்க்கையிலும் நிறைவான இன்பத்தோடு வாழ்தலே மனித லட்சியம் அத்தகைய வாழ்வே அழியாத புகழை ஏற்படுத்தும்.

பாசப்பறவைகள்

பாசப்பறவைகள் வேஷம் இடுகின்றதே கஜானா காலியானதாலா? நேசம் மிக்க உறவுகளும் விலகிச் செல்கின்றதே உதவிக்கரம் நீட்ட வேண்டுமென்றா? முதிர்ந்த மரங்கள் கூட கனிகளைப் பாகுபாடின்றி கொடுக்கின்றது. மனிதன் தான் பாசத்தை பணத்திற்கு மட்டுமே பங்கிடுகின்றான்.

இயற்கையை மீட்டெடுப்போம்

நச்சுப் புகையால் நசுங்கிக் கொண்டிருக்கும் ஓசோன் மூச்சு அலைபேசி அதிர்வுகளால் அழிந்துவரும் சிட்டுக்குருவி இனங்கள் தருக்களின் அழிவால் வனப்பிழந்த வனங்கள் தண்ணீர் இல்லாமல்  வெப்ப காற்றைச் சுவாசிக்கும் நதிகள் நிலங்களைச் சாயம்  போன கந்தல் துணியாக்கும் சாயப்பட்டறைக்  கழிவுகள் செயற்கை உரங்களால் நஞ்சை விளைவிக்கும் புன்செய் நிலங்கள் ஏரிகள் எல்லாம் வீடுகள் மழைக்காலத்தில் வீடுகளை ஏரிகள் இத் தீர்வுகளுக்கான திறவுகோல்கள்... விவசாய நிலங்களின் மேம்பாடு   இனி அதுவே நமது பண்பாடு மரம் வளர்ப்பு அதுவே  இதம் தரும் இயற்கை பாதுகாப்பு மாரியின் மகிமை உணர்த்துவதே நமது கடமை செயற்கையில் இருந்து மீள்வோம்! இயற்கையின் வளத்தை மீட்டெடுப்போம்!