முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கவிதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கவிதை

 தேனும் இனிமை குழந்தைகளின் சிரிப்பும்  இனிமை பாலும் இனிமை குழந்தைகளின் பேச்சும் இனிமை பாகும் இனிமை மலரும் பூக்களும் இனிமை அதுபோல் குழந்தைகளே இனிமை                                                              ப.அ.சமன்யு

பாசப்பறவைகள்

பாசப்பறவைகள் வேஷம் இடுகின்றதே கஜானா காலியானதாலா? நேசம் மிக்க உறவுகளும் விலகிச் செல்கின்றதே உதவிக்கரம் நீட்ட வேண்டுமென்றா? முதிர்ந்த மரங்கள் கூட கனிகளைப் பாகுபாடின்றி கொடுக்கின்றது. மனிதன் தான் பாசத்தை பணத்திற்கு மட்டுமே பங்கிடுகின்றான்.

இயற்கையை மீட்டெடுப்போம்

நச்சுப் புகையால் நசுங்கிக் கொண்டிருக்கும் ஓசோன் மூச்சு அலைபேசி அதிர்வுகளால் அழிந்துவரும் சிட்டுக்குருவி இனங்கள் தருக்களின் அழிவால் வனப்பிழந்த வனங்கள் தண்ணீர் இல்லாமல்  வெப்ப காற்றைச் சுவாசிக்கும் நதிகள் நிலங்களைச் சாயம்  போன கந்தல் துணியாக்கும் சாயப்பட்டறைக்  கழிவுகள் செயற்கை உரங்களால் நஞ்சை விளைவிக்கும் புன்செய் நிலங்கள் ஏரிகள் எல்லாம் வீடுகள் மழைக்காலத்தில் வீடுகளை ஏரிகள் இத் தீர்வுகளுக்கான திறவுகோல்கள்... விவசாய நிலங்களின் மேம்பாடு   இனி அதுவே நமது பண்பாடு மரம் வளர்ப்பு அதுவே  இதம் தரும் இயற்கை பாதுகாப்பு மாரியின் மகிமை உணர்த்துவதே நமது கடமை செயற்கையில் இருந்து மீள்வோம்! இயற்கையின் வளத்தை மீட்டெடுப்போம்!