முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கலம்பகம்

கலம்பகம் பெயர்க் காரணம்  கலம்பகம் என்பதற்குக் கலவை என்ற பொருளும் உண்டு. பல வகையான பூக்களைச் சேர்த்து கட்டிய மாலையைக் கதம்பம் என்கிறோம். அதுபோல பல்வேறு வகையான செய்யுள் உறுப்புகள் அமையப்பெற்று பாடப்படும் பாமாலை கலம்பகம் ஆகும். கலம்பகத்தைக்  கலம்+ பகம் என பிரிப்பர். கலம் என்பது 12 பகம் என்பது அதில் பாதி ஆறு. அதாவது 18 செய்யுள் உறுப்புகளை உடையது கலம்பகம் ஆகும்  கலம்பக உறுப்புகள்   புய  வகுப்பு,மதங்கு, அம்மானை ,காலம், கார்,சம்பிரதம், தவம், குறம்,மறம், பாண்,களி, சிந்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தலை ,ஊசல் என்பன கலம்பக உறுப்புகள் ஆகும் கலம்பகச் செய்யுங்கள்   கலம்பகச்  செய்யுள்கள் கடவுளுக்கு 100, முனிவருக்கு 95, அரசருக்கு 90, அமைச்சருக்கு 70, வணிகருக்கு 50, வேளாளருக்கு 30 என்ற எண்ணிக்கையில் பாடப்பட வேண்டும் என்ற வரையறையை வெண்பா பாட்டியல் எடுத்துக் கூறுகின்றது. முதல் கலம்பகம்  கலம்பக நூல்களுள் காலத்தால் முற்பட்டது நந்திக் கலம்பகம் ஆகும் இது காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் குறித்து பாடப்பட்டது  காஞ்சி, ம...
சமீபத்திய இடுகைகள்

தனிப்பாடல்கள்

தனிப்பாடல் விளக்கம்  தனித்தனி புலவர்களால் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட பாடல்களைத் தனிப்பாடல்கள் என்று அழைக்கின்றோம்.  புலவர்கள் தமது உள்ளக் கருத்தை எவ்வித கட்டுப்பாட்டிற்கும் உட்படுத்தாமல் விருப்பம் போல எழுதிய பாடல்கள் தனிப்பாடல்கள் ஆகும் இப்பாடல்களைத் தனிப்பாடல் திரட்டு என்ற தலைப்பில் தொகுத்துள்ளனர் தனிப்பாடல் அமைப்பு முறை  தனிப்பாடல் சொல் நயமும், பொருள் நயமும், சுவை நயமும் கொண்டு எளிமையாக எழுதப்பட்டவை ஆகும்.  ஓசை விளையாட்டு, சொல் விளையாட்டு, விடுகதை இவை அனைத்தும் தனிப்பாடல்களில் காணப்படுகின்றது  தனிப்பாடல் பாடியுள்ள புலவர்கள்   அவ்வையார், கம்பர் ,புகழேந்திப் புலவர், சத்தி முத்த புலவர், படிக்காசுப் புலவர், சொக்கநாதப் புலவர், ஒப்பில்லாமணி புலவர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். ராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சந்திரசேகர கவிராச பண்டிதர் தமிழகம் முழுவதும் தேடி தனிப்பாடல்களைத் திரட்டி தொகுத்துள்ளார்.

கவிதை

 தேனும் இனிமை குழந்தைகளின் சிரிப்பும்  இனிமை பாலும் இனிமை குழந்தைகளின் பேச்சும் இனிமை பாகும் இனிமை மலரும் பூக்களும் இனிமை அதுபோல் குழந்தைகளே இனிமை                                                              ப.அ.சமன்யு

வாழ்க்கைத் தத்துவம்

வாழ்க்கை என்பது நமக்கும் சமுதாயத்திற்கும் இடையறாது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு போராட்டம் .நீர்க்குமிழி போன்று தோன்றி மறையும் இவ்வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளும் நமக்கு பல உண்மைகளை உணர்த்திச் செல்கின்றது. இரவு பகல் என்னும் சதுரங்கப் பலகையிலே விதி மனிதர்களைக் காய்களாக்கிக் கொண்டு விளையாடும் சூதாட்டம் தான் வாழ்க்கை என்பது பாரசீக கவிஞர் உமர்கயாமின் கருத்து. வாழ்வு நிலையற்றது .நேற்று இருந்தவன் இன்று இல்லை .இன்று இருந்தவன் நாளை இல்லை என்று கூறத்தக்க உலகில் நாம் வாழ்ந்து  கொண்டிருக்கின்றோம்.இருப்பினும் இவ்வுலகம் நிலையானது என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். நிலையாமை உலகத்தின் இயற்கை என்பதை உணர வேண்டும். பல நூல்களைக் கற்ற சான்றோர்கள் கூடியுள்ள அவையில் பலர் கூடி வாதிட்டாலும் தொண்டை கிழிய முழங்கினாலும் இவ்வுலகம் நிலையற்றது என்பதுதான் உண்மை. வாழ்வு மட்டுமல்ல நாம் நினைக்கக்கூடிய எண்ணங்களும் நிலைத்து நிற்பதில்லை. நிலையற்ற வாழ்க்கையிலும் நிறைவான இன்பத்தோடு வாழ்தலே மனித லட்சியம் அத்தகைய வாழ்வே அழியாத புகழை ஏற்படுத்தும்.

பாசப்பறவைகள்

பாசப்பறவைகள் வேஷம் இடுகின்றதே கஜானா காலியானதாலா? நேசம் மிக்க உறவுகளும் விலகிச் செல்கின்றதே உதவிக்கரம் நீட்ட வேண்டுமென்றா? முதிர்ந்த மரங்கள் கூட கனிகளைப் பாகுபாடின்றி கொடுக்கின்றது. மனிதன் தான் பாசத்தை பணத்திற்கு மட்டுமே பங்கிடுகின்றான்.

இயற்கையை மீட்டெடுப்போம்

நச்சுப் புகையால் நசுங்கிக் கொண்டிருக்கும் ஓசோன் மூச்சு அலைபேசி அதிர்வுகளால் அழிந்துவரும் சிட்டுக்குருவி இனங்கள் தருக்களின் அழிவால் வனப்பிழந்த வனங்கள் தண்ணீர் இல்லாமல்  வெப்ப காற்றைச் சுவாசிக்கும் நதிகள் நிலங்களைச் சாயம்  போன கந்தல் துணியாக்கும் சாயப்பட்டறைக்  கழிவுகள் செயற்கை உரங்களால் நஞ்சை விளைவிக்கும் புன்செய் நிலங்கள் ஏரிகள் எல்லாம் வீடுகள் மழைக்காலத்தில் வீடுகளை ஏரிகள் இத் தீர்வுகளுக்கான திறவுகோல்கள்... விவசாய நிலங்களின் மேம்பாடு   இனி அதுவே நமது பண்பாடு மரம் வளர்ப்பு அதுவே  இதம் தரும் இயற்கை பாதுகாப்பு மாரியின் மகிமை உணர்த்துவதே நமது கடமை செயற்கையில் இருந்து மீள்வோம்! இயற்கையின் வளத்தை மீட்டெடுப்போம்!

நட்பு

"முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு"  என்று உண்மை நட்பிற்கு இலக்கணம் வகுத்தார் வள்ளுவர் பெருமகனார். இன்று உண்மையான நண்பர்கள் யார் என்று பல நேரங்களில் இனம் கண்டு கொள்வது கடினமாக இருக்கின்றது.மரத்தின் நிறத்திற்கு ஏற்ப தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் பச்சோந்தி போல இடத்திற்கு ஏற்றவாறு மனிதர்களின் குணத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தி மனிதர்களை  இச்சமூகத்தில் காணமுடிகின்றது. பிறர் மனதை புண்படுத்தும் கேலி ,கிண்டல் பேச்சுக்கள் ,பிறர் உள்ளத்தைத் துன்புற செய்யும் ஜாடையான பேச்சுக்கள் இன்று பெருகிவிட்டன. பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணும் இந்நிலையில் உண்மையான ஆனந்தத்தை காண முடியுமா? சிந்தித்துப் பாருங்கள். வள்ளுவர் புறங்கூறாமை என்ற ஓர் அதிகாரத்தையே வகுத்துள்ளார்.வள்ளலாரும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார். வயதில் இளையவர்கள் சிலர் வயதில் பெரியவர்களை ஏய்! கிழவா ஏய்! கிழவி என்று கூறி பெரியவர்களின் உள்ளம் வருந்த தக்க செயல்களைச் செய்கின்றார்கள். வயதானவர்களும் உள்ளத்தால் இளமையானவர்கள் என...