கனவு இல்லங்கள் அல்ல முதியோர் இல்லங்கள். மனதைக் கனக்க வைக்கும் இல்லங்கள். இன்று முதியோர் இல்லங்கள் பெருகி விட்டன. மனித மனங்கள் மரத்துவிட்டன. தளர் நடை இட்டு வரும் குழந்தையை தாங்கிப் பிடித்த மென்கரங்கள் இன்று கோலை துணையாக்கி கொண்டிருக்கின்றன. நிலவைக் காட்டி தன் குழந்தைக்கு அமுதூட்டி மகிழ்வித்த அன்னை இன்று முதியோர் இல்லங்களில் உணவு உண்ணும் அவலநிலையை எண்ணி உள்ளம் குமுறுகின்றது. குடும்ப வாழ்க்கையில் குழந்தைகளோடு இன்புற்று குதூகலித்த இன்ப நினைவுகள் பல தாய் தந்தையரின் கண்களில் கனவுகளாய் தோன்றி மறைகின்றன. நண்பர்களிடம் கால நேரம் பார்க்காமல் அரட்டை அடிப்பவர்கள் தங்கள் தாய் தந்தையரிடம் சிறிது நேரம் பேசுவதற்கு தயங்குவதும் ஏனோ? பொருள்களில் இல்லை இன்பம் .மனித மனங்களில் இருக்கின்றது இன்பம். இதனை அறிந்தவர் யாரோ? வீட்டின் முதுகெலும்பாய் திகழ்ந்து அயராது உழைப்பவர்கள் இவர்கள் .இவர்களின் முதுது இன்று உழைத்து உழைத்து கூனல் கண்டு விட்டது. சமுதாயத்தில் தன் பிள்ளையைத் தலைநிமிர்ந்து நடக்கச் செய்த பெற்றோர்களுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தி விடாமல் இருக்க வேண்டும் பிள்ளைகள். பணத்தி...