முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

விழுதுகள்

கனவு இல்லங்கள் அல்ல முதியோர் இல்லங்கள். மனதைக் கனக்க வைக்கும் இல்லங்கள். இன்று முதியோர் இல்லங்கள் பெருகி விட்டன. மனித மனங்கள் மரத்துவிட்டன. தளர் நடை இட்டு வரும் குழந்தையை தாங்கிப் பிடித்த மென்கரங்கள் இன்று கோலை துணையாக்கி கொண்டிருக்கின்றன. நிலவைக் காட்டி தன் குழந்தைக்கு அமுதூட்டி மகிழ்வித்த அன்னை இன்று முதியோர் இல்லங்களில் உணவு உண்ணும் அவலநிலையை எண்ணி உள்ளம் குமுறுகின்றது. குடும்ப வாழ்க்கையில் குழந்தைகளோடு இன்புற்று குதூகலித்த இன்ப நினைவுகள் பல தாய் தந்தையரின் கண்களில் கனவுகளாய் தோன்றி மறைகின்றன. நண்பர்களிடம் கால நேரம் பார்க்காமல் அரட்டை அடிப்பவர்கள் தங்கள் தாய் தந்தையரிடம் சிறிது நேரம் பேசுவதற்கு தயங்குவதும் ஏனோ? பொருள்களில் இல்லை இன்பம் .மனித மனங்களில் இருக்கின்றது இன்பம். இதனை அறிந்தவர் யாரோ? வீட்டின் முதுகெலும்பாய் திகழ்ந்து அயராது உழைப்பவர்கள் இவர்கள் .இவர்களின் முதுது இன்று உழைத்து உழைத்து கூனல் கண்டு விட்டது. சமுதாயத்தில் தன் பிள்ளையைத் தலைநிமிர்ந்து நடக்கச் செய்த பெற்றோர்களுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தி விடாமல் இருக்க வேண்டும் பிள்ளைகள். பணத்தி...

அறம் வளர்த்த நாச்சியார்

குமரி மாவட்டத்தில் உள்ள சிறப்பு பெற்ற திருத்தலங்களில் ஒன்று சுசீந்திரம். அங்கு எழுந்தருளியிருக்கும் இறைவன் திருநாமம் தாணுமாலயன். இவ்வூருக்கு நேர் வடக்காக ஒரு கல் தொலைவில் இருப்பது தேரூர் என்னும் பழம்பதி. ஏரிகளும் நெல் வயல்களும் சூழ்ந்த இயற்கை வளம் கனிந்தது இவ்வூர். உழவுத் தொழிலை குலத் தொழிலாகக் கொண்ட வேளாண் குடிமக்கள் பெருக வாழ்ந்தனர் இங்கே. சுசீந்திரம் திருக்கோவில் ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன் கல்வியும் செல்வமும் நிறைந்த ஒரு வேளாண் குடும்பத்தில் ஒரு பெண் தோன்றினாள். அவள் பெயர் அறம் வளர்த்தாள் என்பது. தாயார் பெயர் பள்ளியறை நாச்சியார். அறம் வளர்த்தாள் இளமையிலேயே இறை உணர்வு வாய்க்கப் பெற்றவராய் திகழ்ந்தாள். சுசீந்திரத்தில் எழுந்தருளியுள்ள தாணுமாலையர் மீது அவள் பக்தி உள்ளம் நிலைகொண்டது. வளர வளர பக்தியும் முதிர்ந்தது. அடிக்கடி சுசீந்திரம் சென்று பெருமானை தரிசித்து அளவில்லா இன்பம் துய்தாள். ஆண்டு 12 ஆக அறம் வளர்த்தாள் பூப்பெய்தினாள். அதனால் இற்செறிக்கப் பட்டாள். ஊர் வழக்கம் அது. நேர் நின்று பேச முடியவில்லை உள்ளூர  புளுங்கினாள். பொருமினாள். ஆற்றாமை  மிகுந்தது. அது காதல...